செய்தி: தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மீனவர் கடற்புலியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர, இன்னும் சில மீனவர்கள் புலிகளால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
என்றோ தமிழகத்திற்கு புரிந்திருக்க வேண்டிய உண்மை, இப்பொழுது வெளிவந்திருக்கிறது.இருப்பினும் அரசியல்வாதிகளால் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காலம் காலமாக தமிழினமென்னும் மாயவலையினை பின்னி வந்தவர்களாயிற்றே!இச்செய்தியினை தமிழ்நாடு எடுத்துகொண்ட விதத்திலிருந்தே தெரியவேண்டும், நம்மவர்களின் இரட்டைவேடம்! ஏன்?இதற்கு முன்னர் மீனவர் சுடப்பட்ட போதல்லாம், மத்திய அரசினிடம் கேட்டுத்தான் கண்டனம் இயற்றினீர்களா? இலங்கை அரசு என்றபோதல்லாம் புலியாக பாய்ந்த தமிழினமும் தமிழ்ச்சட்டமன்றமும் கூட, புலிகள் என்றதும் ஆடாக பதுங்கிவிட்டதே? தமிழ் இனம், தமிழர் கலாச்சாரம் என்று பேசித்திரியும் அரசியல் வாதிகள், முதலில் எந்த தமிழனை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்யவேண்டும். ஆதரவோ, எதிர்ப்போ பாதிக்கப்படப் போவது நமது மீனவர்கள். அவர்களை காப்பதே நமது தலையாய கடமை.மற்ற விசுவாசங்களெல்லாம் இதற்கு பின்னர் என்று இருத்துவது நலம்.இனம், மொழி, மதம் போன்றவற்றால் மக்களை பிரித்துப்பார்க்கும் பொழுது எழும் அபாயம் இது எனப்புரிந்து திருந்தினால், தமிழ்நாட்டின் மக்களுக்கும் மீனவர்க்கும் விடிவுகாலம். ஆனால் எங்கே? ஓட்டிற்காக, இலங்கைக்கே கள்ளத்தோணியில் செல்லத்துணிந்தவர்களாயிற்றே நாம்!
Tuesday, May 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சாரே முதல்ல ஒழுங்கா செய்திகளை வாசிச்சிட்டு விமர்சனம் எழுதுங்க.
மீனவர் சங்கத்தலைவர் , இது புலிகளின் வேலையில்லை என்று சொன்ன செய்தியும், விடுதலைப்புலிகளின் அறிக்கையையும் வாசிக்கவில்லையா?
சிங்களவன் உங்க அரசியல்வாதிகளை ஏமாத்தி அறிக்கை விட்டதும் தூக்கிப்பிடிக்கிறீங்களே? 300 க்கு மேல் மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட ஆதாரங்களை மீனவர்களே சொல்லியிருக்கிறார்களே? என்ன செய்யப்போகிறீர்கள்?
தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்ற நிலையை நீங்களும் உருவாக்கிவிடாதீர்கள்? அங்கே ஒரு இனம் அழியுது, உங்க மீனவ சகோதரர்கள் சிங்களவனால் கொல்லப்படுறாங்க, ஏமாத்து அரசியலில் விழுந்து விடாதீர்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி கானா பிரபா,
பதிவிலிட்ட பொழுது இச் செய்திகளை படிக்கவில்லை என்பது உண்மையே. ஆயினும் மீனவ சங்கத்தலைவர் மற்றும் புலிகளின் அறிக்கை இந்நிலைமையினை எந்தவிதத்திலும் மாற்றப்போவதில்லை என்பது எனது கருத்து. இன்னொரு நாட்டின் பிரச்சினையில் தமக்கு ஆதாயம் தேடி அறிக்கைவிடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சாடுவது போலவே அந்த பதிவினை எழுதியிருந்தேன். இந்திய மீனவர் பிரச்சினையினை இந்திய அரசாங்கமும், இலங்கை பிரச்சினையினை இலங்கைத்தமிழரும் சிங்களவரும் தீர்த்துக் கொள்ளவேண்டும். நடுவில் இப்படி இனவாதம் பேசி மூக்கை நுழைத்ததால்தானே தமிழ்மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுகிறது.இதனைத்தான் கண்டித்தேன்.
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி சகோதரா, என் பின்னூட்டம் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
Post a Comment