Sunday, October 29, 2006

நீ இன்னொருவரை காதலிக்கிறாய் என்றவுடன்

இலக்கற்று போன மனதை தேற்றியதில்,

எவர் மீதும் குறை சுமத்தாமல்,குமையாமல்

காயமடையாமல், சோகம் மட்டுமே கொண்டதில்,

கொடுங்குளிர் வாடைக்காற்று முகத்திலறைய

அதன் உறையும் குளிர்தனில் உன் நினைவினை முகர்ந்ததில்,

நீ இல்லாத வாழ்க்கை கோடரியாக கிழித்த பொழுதும்

நெருஞ்சில் முள் தைத்த பாதமாக வாழக்கற்றுக் கொண்டதில்,

எந்த வித எதிர்பார்ப்பில்லாமல் காதலித்த மகிழ்ச்சியில்,

சிறுவனாகிய நான் வளர்ந்து மனிதனானேன்....